பாலியல் வன்முறை - சிறையதிகாரிகள் கைது!!
பரிசினை அண்மித்த புயநகர்ப்பகுதியான 77 இல் அமைந்திருக்கும் மோ (Meaux) நகரத்தின் Meaux-Chauconin சிறைச்சாலையின், சிறைக்காவலர்கள் இருவரும், அவர்களின் உயரதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுக்காற்றுத் தண்டனையில் இருந்த கைதிகளின் 'புரட்சியை' அடுத்து, அவர்கள் தனிமையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவர்களில் சிலரின் மீது, பாலியல் வன்முறை மேற்கொண்டுள்ளனர்.
இந்தக் கைதிகளில் ஒவ்வொருவராக, இரண்டு சிறைக்காவலர்கள் பிடித்து நிற்க, சிறையதிகாரி, கலவரம் அடக்கும் தடி போன்ற ஆயுதத்தால் (matraque) அவர்களின் மீது பாலியல் வன்முறை மேற்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த செம்டெம்பர் மாத இறுதியில் நடைபெற்றுள்ளது. சாட்சியங்களின் அடிப்படையில் இந்த அதிகாரியும் இரண்டு சிறைக்காவலர்களும் இன்று கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தப் பாலியல் வன்முறைக்குள்ளான கைதியொருவர் மிகவும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது காயங்கள், சிறையதிகாரியின் பாலியல் வன்முறையை உறுதிப்படுத்தி உள்ளது.