தொடருந்து நிலையத்தில் இளைஞன் மீது கத்திக்குத்து!!

PARIS TAMIL  PARIS TAMIL
தொடருந்து நிலையத்தில் இளைஞன் மீது கத்திக்குத்து!!

பரிசின் புறநகரப் பகுதியில் நேற்றுக்காலை ஒரு இளைஞன் மீத கத்திக்குத்துத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் Franconville (95) தொடருந்து நிலையத்தில் நடந்துள்ளது.
 
ஒரு 18 வயது இளைஞன் மீது தாக்குதல் நடர்தியவர்கள், பலமுறை கத்தியால் குத்தி உள்ளனர். இவரின் வயிற்றுப்பகுதி, கைகள் மற்றும் தோற்பட்டைகளில் பலத்த கத்திக்குத்து வன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடனடியாக அவசர சிகிச்சைப் படையினர் பொறுப்பேற்றமையால், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இளைஞனிற்கு உயிராபத்துத் தவிர்க்கப்பட்டுள்ளது.
 
தொடருந்து நிலையத்தின் கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகளின் ஒளிப்பதிவுகளுடன், காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
 
 

மூலக்கதை