ஆப்கன் போலீஸ் மையத்தில் கார் குண்டு தாக்குதல்: 47 பேர் பலி

தினகரன்  தினகரன்

காபூல்: ஆப்கனில் போலீஸ் பயிற்சி மையத்தின்  மீது கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 47பேர் பலியானார்கள். 200 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கனின் பக்தியா மாகாணத்தில் தலைநகர் கர்தேஷில் போலீசார் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்நிலையில்  வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார், போலீஸ் பயிற்சி மையம் அருகே ஓட்டி வந்த தீவிரவாதிகள் அதை வெடிக்கச் செய்தனர். அதன்பின் மையத்திற்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 47 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 200 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட போலீஸ் பயிற்சி மையம்  போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

மூலக்கதை