Montélimar நிலையத்தில் நிற்க மறந்த TGV!!

PARIS TAMIL  PARIS TAMIL
Montélimar நிலையத்தில் நிற்க மறந்த TGV!!

நேற்று திங்கட்கிழமை பரிஸ் கார்-து-லியோன் நிலையத்தில் இருந்து புறப்பட்ட TGV ஒன்று, Drôme மாவட்டத்தின் Montélimar நிலையத்தில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டது. 
 
திங்கட்கிழமை 18.24 மணிக்கு Montélimar நிலையத்தில் நிற்கவேண்டிய TGV, நிற்காமல் தொடர்ந்து சென்றுள்ளது. இதனால் பயணிகள் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகினர். குறித்த நிலையத்தில் இறங்கவேண்டிய பயணிகள், 30 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள Livron நிலையத்தில் இறங்கினார்கள். இதனால் பயணிகள் TER மூலம் மீண்டும் Montélimar நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். 
 
பின்னர், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. SNCF தெரிவிக்கும் போது, 'இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவது மிக மிக குறைவாகும். கடந்த 20 வருடங்களில் இதுபோன்ற சம்பவம் இடம்பெறுவது இரண்டாவது தடவை ஆகும். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது!' என தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை