பெரிய திரையில் காட்டப்படும் நம் ஊர்கள்!
- கவிஞர் மகுடேசுவரன் நம்மூரோடு தொடர்புடைய படங்கள் நமக்குச் சிறப்பான இனிமையான நினைவுகளைக் கிளறுபவை. நாம் அதிகம் பயின்று வாழும் இடங்களைக் காண்பிக்கும் படங்கள் என்பதால் அவை மனத்துக்கு நெருக்கமாகி விடுகின்றன. நமது மண்ணில் நின்று வளர்ந்து வாழ்ந்த இடங்களைப் பெரிய திரையில் காணும்போது இனம்புரியாத உள்ளக் கிளுகிளுப்பு தோன்றுவது இயற்கைதான். இதோ பார் என்