இன்று இரவு - இருளில் மூழ்கும் ஈஃபிள்!!
இன்று திங்கட்கிழமை, சோமாலியா நாட்டில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் முகமாக ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட உள்ளன.
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, சற்றுமுன்னர் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சோமாலியாவின் Mogadishu நகரில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 276 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக இந்த அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இன்று நள்ளிரவு முதல் ஈஃபிள் கோபுரம் இருளில் மூழ்கியிருக்கும்.
சனிக்கிழமை சோமாலியாவில் இடம்பெற்ற இந்த தாக்குதலே அந்நாட்டின் வரலாற்றில் அதிகப்படியான மக்கள் உயிரிழந்த தாக்குதலாகும்.