நேரடியாக 10 மில்லியன் பேர் பார்வையிட்ட - மக்ரோனின் நேர்காணல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
நேரடியாக 10 மில்லியன் பேர் பார்வையிட்ட  மக்ரோனின் நேர்காணல்!!

ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், நேற்று இம்மானுவல் மக்ரோன், பிரான்சின் பிரபல செய்தி தொலைக்காட்சியான TF1க்கு வழங்கிய நேர்காணலினை நேரடியாக 9.49 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். 
 
ஞாயிற்றுக்கிழமை இரவு 8.05 மணிக்கு ஆரம்பித்த இந்த நேர்காணல், மிக முக்கியமான நேர்காணலாக கருதப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் மக்ரோன் இந்த பேட்டியினை வழங்கியிருந்தார். ஊடகவியலாளர்கள் Anne-Claire Coudray, Gilles Bouleau மற்றும் David Pujadas ஆகியோர் கேள்விகளை கேட்க, நிதானமாகவும் சரமாரியாகவும் ஜனாதிபதி பதில்களை வழங்கினார். நேற்று நேர்காணல் ஒளிபரப்பாகும் போது, பார்வையாளர்களின் எண்ணிக்கை 36.6 வீதத்தால் உயர்ந்துள்ளது. 
 
TF1 தொலைக்காட்சிக்கு, இந்த வருடத்தின் மூன்றாவது அதிகபட்ச 'பார்வை' இது என தொலைக்காட்சியினர் தெரிவித்துள்ளனர். நேர்காணல் முடிவடைந்ததும் சில கருத்துக்கணிப்புக்களும் இடம்பெற்றன.

மூலக்கதை