சோமாலியாவில் குண்டு வெடிப்பு! 53 பேர் பலி

PARIS TAMIL  PARIS TAMIL
சோமாலியாவில் குண்டு வெடிப்பு! 53 பேர் பலி

சோமாலியாவின் தலைநகரான மொகதிஷுவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 53 பேர் மரணமடைந்துள்ளதுடன், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 
 
குறித்த பகுதியில் உணவகம் ஒன்றிற்கு வெடி பொருட்களுடன் வந்த வண்டி ஒன்று வெடித்ததில் குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
குறித்த சம்பவத்தில் “அதிகமானோர் இறந்துள்ளனர். ஆனால், எவ்வளவு பேர் என்பதை எங்களால் கூற முடியவில்லை” என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
மேலும், படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரில் பலர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் தரப்பு செய்திகள் குறிப்பிடுகின்றன. 
 
சோமாலியாவில் இதுவரை நடக்காத மிகசக்தி வாய்ந்த ஒரு குண்டு வெடிப்பு இது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
 
எனினும் இருந்தவர்களின் எண்ணிக்கையை உறுதியாக கூற முடியவில்லை என்றும், இறப்புக்கள் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வெடிப்புச்சம்பவத்தில் கட்டடத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள்

மூலக்கதை