குல்தீப் யாதவ் கும்ப்ளேவின் தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
குல்தீப் யாதவ் கும்ப்ளேவின் தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் சைனாமேன் பவுலர் குல்தீப் யாதவ் சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளேவின் தயாரிப்புதான் குல்தீப் யாதவ் என, இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுரேஷ் ரெய்னா, இது குறித்து கூறுகையில், ‘’குல்தீப் யாதவ் நன்றாக விளையாடி வருகிறார். இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் கும்ப்ளேவுக்குதான் செல்ல வேண்டும்.

குல்தீப் யாதவுடன் இணைந்து கும்ப்ேள கடினமாக உழைத்தார். ஐபிஎல் தொடரின்போது குல்தீப் யாதவிடம் பேசினேன்.

அவர் எப்போதும் கும்ப்ளேவுக்கு மெசேஜ் அனுப்பியபடியே இருப்பார். குல்தீப் யாதவ், கும்ப்ளேவின் தயாரிப்பு’’ என்றார்.



சுரேஷ் ரெய்னாவுக்கு சமீப காலமாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ‘யோ யோ’ என்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உடல் தகுதி தேர்வில் சுரேஷ் ரெய்னா தோல்வியடைந்ததாக செய்திகள் வெளியானது.

இதில், தேர்வானால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும். இது குறித்து சுரேஷ் ரெய்னாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘’இது தொடர்பாக நீங்கள் (நிருபர்கள்), பிசிசிஐ-யிடம் பேசுங்கள்’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘’அணியில் மீண்டும் இடம் பிடிக்க மிகவும் உழைத்து வருகிறேன்.

வாழ்க்கையில் எதுவும் கடினமாக இல்லை’’ என்றார்.  

.

மூலக்கதை