இரத்தக்காட்டேறிகளின் அச்சத்தில் மீளழைக்கப்பட்ட ஐ.நா உத்தியோகத்தர்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
இரத்தக்காட்டேறிகளின் அச்சத்தில் மீளழைக்கப்பட்ட ஐ.நா உத்தியோகத்தர்கள்!

ஆபிரிக்காவின் தென்கிழக்கு பிராந்திய நாடான மலாவியின் தென் பகுதியில் இரத்தக் காட்டேரிகள் போன்று தம்மை உருவகப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்த ஐவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
 
ஆபிரிக்க நாடுகளில் இன்றும் மூடநம்பிக்கைகள் அதிகமாக வழக்கத்தில் உள்ள நிலையில் ஆபிரிக்காவின் தென்கிழக்கு பிராந்திய நாடுகளில் ஒன்றான  மலாவியில் பேய்கள் தொடர்பான வதந்திகள் அண்மைக்காலமாக அதிகமாக பரப்பப்பட்டு வருவதால் முலான்ஜே மற்றும் பலொம்பி ஆகிய நகர மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
 
மந்திர ஜாலங்களினால் ஏற்படும் அசசுறுத்தல்கள் மற்றும் இறப்புக்களை தவிர்க்கும் பொருட்டு மலாவி அரசாங்கம் இரவு நேரத்தில் ஊரடங்குச் சட்டத்தையும் பிறப்பித்துள்ளது. இதன் படி அங்கு இரவு 7 மணி தொடக்கம் அதிகாலை 5 மணிவரை 10 மணத்தியால ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளது.
 
மனிதர்களில் இரத்தததை குடிக்கும் இரத்தக்காட்டேரிகள் என அழைக்கப்படும் பேய்களிடமிருந்து தம்மையும் தமது அயலவர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையில் மலாவியின் தென்பிராந்திய மக்கள் சிறு சிறு  குழுக்களாக பிரிந்து இரவு நேரங்களில் காவல்  கடமமைகளில் ஈடுபட்டு வந்தனர்.
 
இதற்கமைய காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்த மக்களிடம் இரத்தக்காட்டேரிகளை போல் வேடம் தரித்து மக்களை அச்சுறத்தி வந்த ஐவர் வசமாக சிக்கிக்கொண்டுள்ளனர்.
 
பீதி காரணமாக கடும் ஆத்திரமுற்று  விரக்தியில் இருந்த மக்கள் தம்மிடம் சிக்கிய 5 பேய்களையும் நையப்புடைத்ததால் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
 
இதேவேளை கடந்த 2002ஆம் ஆண்டும் இதேபோன்று திடீரென பரவிய பேய்கள் தொடர்பான வதந்திகளால் மலாவியில் தென்பகுதிகளில் கலவரங்கள் வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
மனித இரத்தத்தை குடிக்கும் பேய்களின் நடமாட்டம் இருப்பதாக பரவிய தகவல்களையடுத்து மலாவியின் தென்பகுதியில் நிலைகொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை தனது உத்தியோகத்தர்களை அவசரமாக வெளியேற்றியிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை