உலக கோப்ைபக்கு அர்ஜென்டினா தகுதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக கோப்ைபக்கு அர்ஜென்டினா தகுதி

2018 பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் ரஷ்யாவில் நடைபெறுகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள், கண்டங்கள் வாரியாக நடத்தப்பட்டு வருகின்றன.

தென் அமெரிக்க பிரிவில் அர்ஜென்டினா 6வது இடத்தில் இருந்து வந்தது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே உலக கோப்பைக்கு தகுதி பெற முடியும்.

5வது இடம் பிடிக்கும் அணி கண்டங்களுக்கு இடையேயான பிளே ஆப் சுற்று போட்டியில் விளையாட வேண்டும். இந்த நெருக்கடியான சூழ்நிலையில், ஈக்வாடர் தலைநகர் கியூடோவில் இன்று அதிகாலை நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில், அர்ஜென்டினா-ஈக்வாடர் அணிகள் மோதின.

இதில், 3-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்தார்.

மெஸ்ஸி 3வது கோலை அடித்ததும் உற்சாக மிகுதியில் துள்ளி குதிக்கும் அர்ஜென்டினா வீரர்கள். இந்த வெற்றி தென் அமெரிக்க பிரிவில் அர்ஜென்டினா 3வது இடத்துடன் நிறைவு செய்வதை உறுதியாக்கியுள்ளது.

இதன் மூலம் உலக கோப்பைக்கு அர்ஜென்டினா தகுதி பெற்றுள்ளது.

இதேபோல் போர்ச்சுக்கல்லும் உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

.

மூலக்கதை