வாய்ப்புகள் என் வீட்டு கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை
சென்னை: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் ஒரு நாள், டி20 என நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணியில், சமீப காலமாக அவர் தேர்வு செய்யப்படுவதில்லை.
இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்களுக்கும் அஸ்வின் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதாக தேர்வாளர்கள் கூறினாலும், இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி போட்டிகளில் அஸ்வின் விளையாடினார்.
இதனிடையே அஸ்வின் அளித்த பேட்டி ஒன்றில், ‘’ஒரு நாள் வாய்ப்புகள் என் வீட்டு கதவை தட்டும். ஏனெனில் நான் அதிக தவறுகளை செய்யவில்ைல.
வாய்ப்பு கிடைக்கும்போது, சிறப்பாக விளையாடி, அதனை நன்கு பயன்படுத்தி கொள்வேன்’’ என கூறியுள்ளார்.
.