கனடாவில் துப்பாக்கிச் சூடு- தமிழ் வர்த்தகர் படுகாயம்!

என் தமிழ்  என் தமிழ்
கனடாவில் துப்பாக்கிச் சூடு தமிழ் வர்த்தகர் படுகாயம்!

கனடாவில் ஸ்கார்பரோ நகரில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் வர்த்தகர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனேடிய நேரடிப்படி நேற்று மதியம் 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்கார்பரோ Eglinton and Brimley சந்திப்பிற்கு அருகாமையில் அமைந்துள்ள மயூரா ஜூவல்லர்ஸ் என்ற நகையகத்திலேயே துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகையகத்தின் உரிமையாளரான தமிழ் வர்த்தகர் மீது இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பா மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருக்கின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் 3 சந்தேக நபர்களை தாம் அவதானித்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு ஆண் மற்றும் 2 பெண் சந்தேக நபர்கள் அவ்விடத்தில் இருந்ததாகவும், அவர்கள் தங்கள் முகத்தை மூடியிருந்ததாகவும் நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.

கடை உரிமையாளர் மீது மூன்று முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அந்த பகுதியில் பல பாடசாலைகள் உள்ளதாக தெரிவித்த பொலிஸார் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை