ஆஸி. தோல்வி ஏன்? சேவாக் விளக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸி. தோல்வி ஏன்? சேவாக் விளக்கம்

மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, ஒரு நாள் தொடரில் 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. அந்த அணியின் தோல்விக்கான காரணம் குறித்து வீரேந்திர சேவாக் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடக்க உள்ளது. அந்த ஏலத்தை நினைத்து பயம் அவர்களிடம் உள்ளது.

இந்தாண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஏமாற்றவில்லை.

ஒரு நாள் தொடரில் இந்திய அணியை வீழ்த்தியிருந்தால், வீரர்களை ஏலம் எடுப்பவர்கள் சிந்தித்திருக்கக்கூடும்.

இந்திய வீரர்களுக்கு சவாலாக இருந்த வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். இருந்தபோதும், ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டீவ்ஸ்மித் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

அவர்கள் ஏதோ ஒரு அழுத்தத்திலேயே உள்ளனர்.   தற்போதைய நிலையில் அந்த அணியில் பெரிய வீரர்கள் இல்லை, வார்னர், பிஞ்ச், ஸ்மித் மட்டுமே அனுபவம் பெற்றவர்களாக இருக்கின்றனர்.

இவ்வாறு சேவாக் கூறினார்.

.

மூலக்கதை