கவலைக்கிடமான நிலையில் இருக்கும் கணவரை பரோலில் வந்து பார்க்க மறுத்த சசிகலா!

என் தமிழ்  என் தமிழ்
கவலைக்கிடமான நிலையில் இருக்கும் கணவரை பரோலில் வந்து பார்க்க மறுத்த சசிகலா!

மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் கணவரை பார்க்க சசிகலா பரோலில் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.சசிகலாவின் கணவர் நடராஜன், உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நடராஜனுக்கு சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் அவர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த கர்நாடக அ.தி.மு.க செயலர் புகழேந்தி பரோல் விடுமுறையில் வந்து நடராஜனை பாருங்கள் என சசிகலாவிடம் கூறியுள்ளார்.

பரோல் கேட்பதற்கான மனுவில் கையெழுத்திடும் படி அவர் சசிகலாவிடம் கேட்க அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதே சமயம், நடராஜனின் உடல்நிலை பற்றி மட்டும் புகழேந்தியிடம் விசாரித்துள்ளார்.இது குறித்து மன்னார்குடி வட்டம் கூறுகையில், கவலைக்கிடமாக உள்ள கணவரை அறுவை சிகிச்சைக்கு முன் வந்து சசிகலா பார்க்க உறவினர்கள் விரும்புகின்றனர்.ஆனால், அவர் மறுத்துள்ளார். ஏற்கனவே, மகாதேவன், தினகரன் மாமியார் மரணத்திற்கும் சசிகலா வரவில்லை. இதனால், குடும்பத்தில் பிரச்னை வெடித்துள்ளது என கூறியுள்ளனர்.

மூலக்கதை