கூட்டாட்சியைக் கொடுத்து விடுவாரா மகாநாயக்கர்? – கேட்கிறார் ஐதேக எம்.பி

என் தமிழ்  என் தமிழ்
கூட்டாட்சியைக் கொடுத்து விடுவாரா மகாநாயக்கர்? – கேட்கிறார் ஐதேக எம்.பி

வடக்கு முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் மகா­நா­யக்க தேரரைச் சந்­தித்துக் கூட்­டாட்­சித் தீர்வைக் கேட்­டா­லும் அந்­தத் தீர்வைத் தேரர்­க­ளால் வழங்க முடி­யுமா என்று ஐக்­கிய தேசியக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் துஸார இந்­து­னில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல­வந்­த­மாகக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­தலைக் குற்­ற­மாக அறி­விக்­கும் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் எது­வும் அறி­யா­மல் பேசு­கின்­ற­னர் மகிந்த அணி­யி­னர். அந்­தச் சட்­ட­வ­ரை­வுக்­கும் படை­யி­ன­ருக்­கும் எந்­தத் தொடர்­பும் இல்லை. கடந்த காலத்­தில் போரில் ஈடு­பட்ட எந்­த­வொரு படை­யி­ன­ரும் இத­னால் பாதிக்­கப்­பட்­ட­மாட்­டார்­கள். அவர்­க­ளு­டன் இது எந்த வகை­யி­லும் தொடர்­பு­ ப­டாது.

படை­யி­னர் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­லும்­போது அந்த நாடு­க­ளால் கைது செய்­யப்­ப­டு­வர் என்று கூறப்­ப­டு­வ­தும் பொய்­யா­கும். எது­வும் நடக்­காது. படை­யி­னரை இவர்­கள் திட்­ட­மிட்டு பய­மு­றுத்­து­கின்­ற­னர். சிங்­கள மக்­க­ளுக்கு மத்­தி­யில் வீண் பீதி­யைக் கிளப்­பி­வி­டு­கின்­ற­னர். இனி இடம்­பெ­றப் போகும் கடத்­தல்­கள் மற்­றும் காணா­மல் போத­லையே அது தடுக்­கும். இந்­தச் சட்­ட­வ­ரைவை நாம் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் அழுத்­தம் கார­ண­மா­கக் கொண்டு­வ­ர­வில்லை. அவ்­வாறு நாம் அழுத்­தங்­க­ளுக்கு அடி பணி­ய­மாட்­டோம்.

மகிந்த அணி­யி­னர் எல்லா விட­யங்­க­ளை­யும் அர­சி­ய­லாக்­கு­கின்­ற­னர். வடக்கு முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் மகா­நா­யக்க தேர­ரைச் சந்­தித்­த­தை­யும் அர­சி­ய­லாக்கி அதை­யும் அர­சு­டன் தொடர்­பு­ப­டுத்­து­கின்­ற­னர். விக்­னேஸ்­வ­ரன் மகா­நா­யக்க தேரரைச் சந்­தித்துக் கூட்­டாட்­சித் தீர்வைக் கேட்­ட­தற்கும் அர­சுக்­கும் எந்­தத் தொடர்­பும் இல்லை. அப்­ப­டிக் கேட்­டா­லும் அந்­தத் தீர்வைத் தேரர்­க­ளால் வழங்க முடி­யுமா? என்­றார்.

மூலக்கதை