பிரதமர் மோடியின் தூய்மை சேவை திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் முழு ஆதரவு

PARIS TAMIL  PARIS TAMIL
பிரதமர் மோடியின் தூய்மை சேவை திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் முழு ஆதரவு

பிரதமர் நரேந்திர மோடி, காந்தியின் 145-வது பிறந்த நாளான 2014, அக்டோபர் 2-ல் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிவைத்தார். காந்தியின் 150-வது பிறந்தநாளான 2019, அக்டோபர் 2-க்குள் இத்திட்டத்தின் குறிக்கோள் எட்டப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு வாரணாசியில் அவரே தூய்மைப்படுத்தும் நடவடிக்கையையும் மேற்கொண்டார்.

எல்லா மாநிலங்களிலும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்கள் பலரை தூதர்களாக நியமித்தனர். மேலும் இத்திடம் குறித்து பல்வேறு ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. சமுதாயத்தின் பல பிரிவினரும் தூய்மை இந்தியா இயக்கத்திற்கு பல்வேறு வகையில் ஆதரவு அளித்தனர். 

தூய்மை இந்தியா திட்டம் தொடங்கபட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தூய்மையே கடவுள் , என்றும் பிரதமர் மோடியின்  தூய்மை இந்தியா திட்டத்திற்கு எனது முழு ஆதரவை வழங்குகிறேன் என  கூறி உள்ளார்.
 

மூலக்கதை