தமிழகத்தில் மாநில சுயாட்சி மாநாட்டை முதலில் நடத்தியது திமுக: ஸ்டாலின் பேச்சு
சென்னை: தமிழகத்தில் மாநில சுயாட்சி மாநாட்டை முதலில் நடத்தியது திமுக தான் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் நடந்து வரும் மாநில சுயாட்சி மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மாநில சுயாட்சி தேவை என்பதை இன்று எல்லோரும் உணர்ந்து இருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.