காவி தமிழகத்தில் காலூன்ற முடியாது

தினகரன்  தினகரன்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:  பழனிச்சாமி, பன்னீர் செல்வம் இணைந்த பிறகு அடுத்த நாளே அவசர அவசரமாக ஆளுநர் பதவியேற்பை நடத்தி வைக்கிறார். ஆனால், 19 எம்எல்ஏக்கள் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லை என மனு அளித்து பல நாட்களாகியும் அமைதியாக இருக்கிறார். எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய பிறகும் பெரும்பான்மையை இழந்த பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்ட உத்தரவிடாமல் ஆட்சிக்கு முட்டுக்கட்டை கொடுத்து கொண்டிருக்கிறார். மத்திய அரசின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். எத்தனை முயற்சி எடுத்தாலும் காவி கூட்டம் தமிழகத்தில் காலூன்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை