மின் வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை

தினகரன்  தினகரன்

கோவை:  கோவை மாவட்டம் இடையர்பாளையம், தேவாங்கர் நகரை சேர்ந்தவர் சின்ராஜ். இவர் தனது வீட்டின் மின் இணைப்பிற்காக இடையர்பாளையம் மின்சார வாரியத்தில் விண்ணப்பித்தார். அப்போது, இளநிலை பொறியாளராக இருந்த தாமோதரன்(54) மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் கேட்டார். அதன்படி, கடந்த 18.10.2007ம் தேதி சின்ராஜிடம் தாமோதரன் ரூ.10,000 லஞ்சம் வாங்கினார். அப்போது அவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கை  கோவை விஜிலென்ஸ் கோர்ட்  நீதிபதி ஜான்மினோ விசாரித்து  தாமோதரனுக்கு 2 ஆண்டு சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

மூலக்கதை