கொழும்பில் திடீரென அதிர்ந்த 6 மாடிக் கட்டிடம்! மக்கள் வெளியேற்றம்

PARIS TAMIL  PARIS TAMIL
கொழும்பில் திடீரென அதிர்ந்த 6 மாடிக் கட்டிடம்! மக்கள் வெளியேற்றம்

கொழும்பு - கொம்பனி வீதியில் உள்ள 6 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்றில் நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
 
கிடைக்க பெற்ற தகவலுக்கு அமைய குறித்த கட்டிடத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 
பின்னர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் சென்று கட்டிடம் குறித்து பரிசோதனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
அக் கட்டிடத்திற்கு அருகில் நிலத்தடி மின்சார நடவடிக்கைகளுக்காக நிலம் தோண்டப்பட்டுள்ளது.
 
இதனால்& கட்டிடம் நடுங்கியதா,இல்லையா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை