பெண் பொலிஸ் அதிகாரிகளை மிரள வைத்த நபர்கள்! சோதனையில் நடந்த விநோதம்
பிலியந்தலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவர்கள் தொடர்பில் விநோத தகவல் வெளியாகி உள்ளது.
பொலிஸாரினால் இரு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பெண் ஒருவரும் ஆண்கள் மூவருமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பிலியந்தல - தம்பே ஹோட்டவில் பிறந்த நாள் விருந்து ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்வதற்கு வந்த இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியுள்ளது.
தாக்குதல் காரணமாக இரு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை பார்த்தால் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதியுள்ளதாக பிலியந்தலை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்போது இரு பெண்களை சோதனையிடுமாறு பெண் பொலிஸ் அதிகாரியிடம், உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய தனியறையில் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது பெண் உடையில் ஆணொருவர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பொலிஸ் அதிகாரிகள், உயர் அதிகாரியிடம் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையின் போது, ஆசையின் நிமித்தம் பெண் உடையில் வந்ததாக குறித்த ஆண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிறந்த நாள் விருந்து நடத்தியவருக்கு தன்னை நன்கு தெரியும் என சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மதுபோதையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.