ரூபாயின் மதிப்பால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி

தினமலர்  தினமலர்
ரூபாயின் மதிப்பால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த ஒருவாரமாக நல்ல உயர்வுடன் இருந்த நிலையில் இருதினங்களாக சரிவை சந்தித்து வருகின்றன. அதிலும் ரூபாயின் மதிப்பு இன்று 26 காசுகள் வீழ்ச்சி அடைந்ததால் பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கின.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 43.68 புள்ளிகள் சரிந்து 32,356.83-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 22.90 புள்ளிகள் சரிந்து 10,118.25-ஆகவும் வர்த்தகமாகின. மேலும் முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததால் வர்த்தகம் மேலும் சரிந்தன. காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 158 புள்ளிகளும், நிப்டி 57 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகின.

மூலக்கதை