தொலைக்காட்சி நாடகங்களை ரசித்த வீட்டு உரிமையாளருக்கு நேர்ந்த பரிதாபம்!

PARIS TAMIL  PARIS TAMIL
தொலைக்காட்சி நாடகங்களை ரசித்த வீட்டு உரிமையாளருக்கு நேர்ந்த பரிதாபம்!

வீட்டு உரிமையாளர்கள் இரவில் தொலைக்காட்சியில் நாடகங்களைப் பார்த்துக்கொண்டிருந்த வேளை, நீர்ப்பம்பிகளை (Water pumps) திருடிய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
நீர்கொழும்பு கந்தவல பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 22 வயது இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
இவ்வாறு இந்த இளைஞனால் களவாடப்பட்ட 6 நீர்ப்பம்பிகளும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
இவை 2 இலட்சம் ரூபா பெறுமதியானவை என்றும் கைதுசெய்யப்பட்ட இளைஞன் போதைப் பொருள் பாவனையாளர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
நாள் ஒன்றுக்கு 1500 – 2000 ரூபா வரை போதைப் பொருள் பாவனைக்காக குறித்த இளைஞன் செலவு செய்வார் என்றும் தெரியவந்துள்ளது.
 
இவ்வாறு களவாடப்பட்ட நீர்ப்பம்பிகள் அப்பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
 
கந்தவல கட்டான, வெலிஹேன பகுதியில் களவு செய்துள்ளார் என்றும் வீட்டுரிமையாளர்கள் இரவில் பிரபல தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இந்த இளைஞன் நீர்ப்பம்பிகளை களவாடியுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை