டாடா மோட்டார்ஸ் பங்குகளை டாடா சன்ஸ் வாங்க திட்டம்

தினமலர்  தினமலர்
டாடா மோட்டார்ஸ் பங்குகளை டாடா சன்ஸ் வாங்க திட்டம்

மும்பை : டாடா சன்ஸ் நிறு­வ­னம், டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தின், 1.7 சத­வீத பங்­கு­களை வாங்க உள்­ளது.

தற்­போது, டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தின் பங்கு விலை­யின்­படி, 2,000 கோடி ரூபாய் மதிப்­பி­லான பங்­கு­களை, டாடா சன்ஸ் வாங்­கும் என, தெரி­கிறது. இந்­ந­ட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள, டாடா சன்ஸ், சிட்டி வங்­கியை நிய­மித்­துள்­ளது. ஏற்­க­னவே, டாடா சன்ஸ் நிறு­வ­னம், 2016 டிசம்­ப­ரில், டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தின், 1.02 சத­வீத பங்­கு­களை, 2,430 கோடி ரூபாய்க்கு வாங்­கி­யது. இதை­ய­டுத்து, ஒரே ஆண்­டில், இரண்­டா­வது முறை­யாக, தற்­போது மீண்­டும் பங்­கு­களை வாங்­கு­கிறது. இதன் மூலம், டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தில், டாடா சன்ஸ் நிறு­வ­னத்­தின் பங்கு, 33.3 சத­வீ­த­மாக உய­ரும்.

விரை­வில், திரும்ப வாங்­கும் பங்­கு­கள் மற்­றும் விலை உள்­ளிட்ட விப­ரங்­களை, டாடா சன்ஸ் தெரி­விக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தில், டாடா இண்­டஸ்ட்­ரீஸ் மற்­றும் டாடா இன்­வெஸ்ட்­மென்ட் நிறு­வ­னங்­களும், முறையே, 2.5 சத­வீ­தம் மற்­றும் 0.37 சத­வீத பங்­கு­களை கொண்­டுள்ளன. டாடா சன்ஸ் நிறு­வ­னம், டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தின் பங்­கு­களை வாங்­கு­வது தொடர்­பான தக­வல் வெளி­யா­னதை அடுத்து, மும்பை பங்­குச் சந்­தை­யில், நேற்று பங்கு விலை, 18.55 ரூபாய் அதி­க­ரித்து, ௪௨௩.௯௦ ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.

டாடா சன்ஸ், அதன் கீழ் உள்ள நிறு­வ­னங்­கள் அனைத்­தி­லும், குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு பங்கு மூல­த­னத்தை உயர்த்தி, தனி­யார் நிறு­வ­ன­மாக மாற முயற்­சித்து வரு­கிறது. இதற்கு, டாடா சன்ஸ் முன்­னாள் தலை­வர், சைரஸ் மிஸ்­திரி எதிர்ப்பு தெரி­வித்து உள்­ளார்.

மூலக்கதை