நபரை தீண்டியவுடன் 10 குட்டிகளை போட்ட பாம்பு! யாழ். வைத்தியசாலையில் பரபரப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
நபரை தீண்டியவுடன் 10 குட்டிகளை போட்ட பாம்பு! யாழ். வைத்தியசாலையில் பரபரப்பு

பாம்புக் கடிக்கு இலக்காகிய ஒருவர், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அவர் தன்னைத் தீண்டிய பாம்பை போத்தலில் அடைத்து வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளார்.
 
அந்தப் பாம்பு போத்தலுக்குள்ளேயே 10 குட்டிகளைப் போட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
யாழ்ப்பாணம், காரைநகரில் நேற்று முன்தினம் ஒருவருக்குப் பாம்பு தீண்டியுள்ளது. அவர் சிகிச் சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். 
 
சம்பவத்தில் காரைநகரை சேர்ந்த சுப்பிரமணியம் சிறிரங்கன் (வயது – 36) என்பவரே பாம்புக் கடிக்கு இலக்காகினார்.
 
தீண்டிய பாம்பை இனம்காணும் நோக்கில் அவர், அதனை ஓர் போத்தலில் பிடித்து அடைத்து வைத்தியசாலைக்குக் கொண்டு வந்துள்ளார். 
 
அந்தப் பாம்பு சிறிது நேரத்தில் 10 குட்டிகளைப் போட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
பாம்புக் கடிக்கு இலக்கானவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
 
இதேவேளை அந்தப் பாம்பு பரிசோதனையின் பின்னர் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 

மூலக்கதை