சிறிலங்காவின் வான்பரப்பில் உலாவிய விசித்திர தட்டால் குழப்பம்!
களுத்துறை , பாதகட பிரசேதத்தில் உலங்கி வானூர்தியொன்றில் மேலதிக பகுதியொன்று பொருத்தப்பட்டு வானில் உலாவியது தொடர்பில் பிரதேசவாசிகள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த சம்பவம் புதையல் தேடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியென பிரதேசவாசிகள் சந்தேகித்துள்ளனர்.
இந்த பின்னர் அந்த பிரதேசத்தில் காரீயம் காணப்படுகிறதா என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த நடவடிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நிலையில் , குறித்த அதிகாரிகள் இது தொடர்பில் குறித்த பிரதேசவாகிகளுக்கு அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.