கிளிநொச்சியில் வாள்வெட்டு! ஆபத்தான நிலையில் மூவர்

PARIS TAMIL  PARIS TAMIL
கிளிநொச்சியில் வாள்வெட்டு! ஆபத்தான நிலையில் மூவர்

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக  இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்தே அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
குறித்த வாள்வெட்டு சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாகவும், இதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
படுகாயமடைந்த மூவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
மதுபோதையில் நின்ற  நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம்  காரணமாக  இந்த வாள்வெட்டு சம்பவம் ஏற்பட்டதாக  கிளிநொச்சி பொலிஸார்  குறிப்பிட்டனர்.
 
இந்நிலையில் வாள் வெட்டு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் இராணுவ முகாமிற்குள் ஒடி மறைந்ததாகவும் அவர்களை கைது செய்யுமாறு கோரியும் பரந்தன் சந்தியில்  மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
 
இதனையடுத்தே அங்கு பதற்றமான சூழல்நிலை ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை