அமெரிக்காவில் இந்திய டாக்டர் கொலையில் வாலிபர் கைது
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் மாகாணத்தில் டாக்டராக தொழில் செய்து வந்தவர் அச்சுதா ரெட்டி (57). இவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இந்த சூழலில் அவரது கிளினிக் அருகிலேயே கடந்த புதன் கிழமை மர்ம நபரால் கத்தியால் குத்தி அச்சுதா ரெட்டி கொலை செய்யப்பட்டார். நோயாளி ஒருவருக்கு அச்சுதா ரெட்டி யோகா பயிற்சி அளித்து வந்துள்ளார். அவர்தான் இவரை கொலை செய்திருக்கலாம் என கான்சாஸ் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணையில் 21 வயது வாலிபரான உமர் ரஷீத் என்பவரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அச்சுதா ரெட்டியின் மனைவி பீனாவும் டாக்டராக தொழில் செய்து வருகிறார்.
இதே மாகாணத்தில் கடந்த பிப்ரவரியில் சாப்ட்வேர் இன்ஜினியரான தெலங்கானாவைச் சேர்ந்தவரான னிவாஸ் குச்சி போட்லா என்பவர் சுட்டு கொல்லப்பட்டார்.
.