உலக லெவன்-பாக். இடையே இன்று கடைசி டி.20 போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக லெவன்பாக். இடையே இன்று கடைசி டி.20 போட்டி

லாகூர்: 2009ம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது லாகூரில் வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பிற நாட்டு அணிகள் சென்று விளையாட தயக்கம் காட்டி வருகின்றன.

இதையடுத்து பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகளை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஐசிசி ஒத்துழைப்புடன் டுபிளசிஸ் தலைமையிலான உலக லெவன் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து டி. 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.



முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2வது போட்டியில் உலக லெவன் அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது மற்றும் கடைசி டி. 20 போட்டி லாகூரில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7. 30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.

.

மூலக்கதை