14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!

PARIS TAMIL  PARIS TAMIL
14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!

 ஐ.பி.எல். போட்டியின் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பஞ்சாப் அணி கடைசி ஓவரில் 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

 
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மொகாலியில் நடைபெற்றது. பிளேஆ-ப் சுற்றுக்கு தகுதி பெற கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.  
 
சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கிய பஞ்சாப் அணி சார்பில் மார்ட்டின் கப்தில், வோரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 
 
வோரா 16 பந்தில் 25 ரன்கள் எடுத்த நிலையிலும், கப்தில் 16 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த ஷேன் மார்ஷ் 11 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 4-வது வீரராக களம் இறங்கிய சகா 38 ரன்களும், அடுத்து வந்த மேக்ஸ்வெல் 25 பந்தில் 44 ரன்களும் எடுக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
 
இதைத் தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரர்களான எஸ்.பி நரெய்ன் 18 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பின் கவுதம் காம்பீர் 8 ரன்களையும், உத்தப்பா ரன் ஏதும் குவிக்காமலும் ஆட்டமிழந்தார். 
 
ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்தாலும் மற்றொரு துவக்க வீரரான சி.ஏ. லின் அதிரடியாக விளையாடி 84 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் ரன்களை குவிக்க திணறியதை தொடர்ந்து கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 153 ரன்களை மட்டுமே குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய திவேதியா, எம்.எம். ஷர்மா தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர். 
 
கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெரும் பட்சத்தில் பஞ்சாப் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.   

மூலக்கதை