அமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் பலி

டெக்சாஸ்: அமெரிக்காவின்  டெக்சாஸ்,  மிசிசிபி, உள்ளிட்ட மாகாணங்களில் நேற்று முன்தினம் கடுமையான சூறாவளி காற்று வீசியது. அப்போது பலத்த மழையும் கொட்டியது.

மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டருக்கும் மேலான வேகத்தில் காற்று சுழன்று வீசியதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் மீது மரங்கள் விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.

ஒரு குழந்தை உள்பட 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

72 வயது பெண் ஒருவர் காருடன் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார். இந்த சூறாவளிக்கு இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர்.

100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

.

மூலக்கதை