‛முன்கூட்டியே பார்லி., தேர்தலுக்கு வாய்ப்பில்லை'

தினமலர்  தினமலர்
‛முன்கூட்டியே பார்லி., தேர்தலுக்கு வாய்ப்பில்லை

ஐதராபாத்: பார்லி., ‛தேர்தலை முன்கூட்டியே நடத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அது ஆதாரமற்ற வதந்தி' என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

வாய்ப்பில்லை:
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: எங்கள் கட்சி தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும், 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு தயாராகும்படி, தொண்டர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இதை சிலர், தவறாக புரிந்து, லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் வரப்போவதாக பீதியை கிளப்புகின்றனர். அதற்கு அவசியமே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை