ஐ.பி.எல் டி20 : கொல்கத்தா அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபாரம்
ஐதராபாத்: ஐ.பி.எல் டி20 சீசன் 10 தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சன்ரைசா்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவித்தது. அந்த அணியின் டேவிட் வார்னர் 43 பந்துகளை எதிர்கொண்டு 8 சிக்சர், 7 பவுண்டரிகள் அடித்து அதிரடியாக சதத்தை பூர்த்தி செய்தார். இதனையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.அந்த அணி 7 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் சுமார் அரை மணி நேரத்திற்கு பின் ஆட்டம் மீண்டும் துவங்கியது. தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.