ஆதரவற்ற குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கிய துல்கர் சல்மான்..!

தினமலர்  தினமலர்
ஆதரவற்ற குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கிய துல்கர் சல்மான்..!

மலையாள நடிகர்களில் பலரும் ஷூட்டிங் இல்லாத நாட்களில் சொந்த வேலைகளை பார்க்கும்போது, இளம் முன்னணி நாயகன் துல்கர் சல்மான் மட்டும் சமூக நிகழ்வுகளுக்கு அதில் பெரும்பகுதி நேரத்தை ஒதுக்கி விடுகிறார்.. அப்படித்தான் சமீபத்தில் கொச்சியில் உள்ள எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்திற்கு (SOS Children Village Kerala) சென்று அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் நிறைய நேரம் செலவிட்டு அவர்களை மகிழ்வித்துள்ளார்..

எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் என்பது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை கண்டறிந்து, அவர்களை படிக்கவைத்து பாதுகாக்கும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும்.. இங்குள்ள குழந்தைகளுக்கு துல்கர் சல்மானை ரொம்பவே பிடிக்கும் என்பதால், நிர்வாகத்தினர் அதை துல்கர் சல்மானிடம் கோரிக்கையாக வைத்தனர்.. அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட துல்கர் சல்மான் அங்கே வந்து குழந்தைகளை மகிழ்வித்து சென்றுள்ளார்.

மூலக்கதை