தேசிய முன்னணி ஒரு துரதிர்ஷ்ட்டம்!! - அலைன் ஜூபே ஆவேச கருத்து!!

PARIS TAMIL  PARIS TAMIL

ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றில் இம்மானுவல் மக்ரோனுக்கு தாம் ஆதரவு அளிப்பதாகவும், அவருக்கே அனைவரும் வாக்களிக்கவேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் Alain Juppé தெரிவித்துள்ளார். 
 
நேற்று சனிக்கிக்கிழமை அவர் வாக்களர்களுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார். அவர் தெரிவிக்கும் போது, ' மே 7 ஆம் திகதி இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்றில், வாக்காளர்கள் அனைவரும் இம்மானுவல் மக்ரோனுக்கே வாக்களிக்கவேண்டும்!' என குறிப்பிட்டுள்ளார். தவிர, 'இதை விடுத்து வேறு வழிகள் இருப்பதாக தெரியவில்லை.. தேசிய முன்னணி கட்சிக்கு வாக்களிப்பது பிரான்சுக்கு துரதிர்ஷ்ட்டம் ஆகும்.!' எனவும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் மரீன் லூ பென்னுக்கு ஆதரவளிக்கும் சக ஜனாதிபதி வேட்பாளர்களையும் Alain Juppé விமர்சித்துள்ளார். Nicolas Dupont-Aignan ,   Jean-Luc Mélenchon போன்றோர் மரீன் லூ பென்னுக்கு ஆதரவளிக்கிறனர். அவர்கள் மிக குழப்பமான மன நிலையில் இருக்கின்றனர்.!' என தெரிவித்துள்ளார். 
 
அத்தோடு, "இந்த தேர்தலில் இரு வேட்பாளர்கள் தான் இருக்கிறனர். இருவரில் ஒருவருக்குத்தான் வாக்குகள் அளிக்கவேண்டும். இம்மானுவல் மக்ரோனே சரியான தேர்வாகும்!' என அலைன் ஜூப் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை