ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பைனலில் தீபிகா - ஜோஷ்னா

தினகரன்  தினகரன்

சென்னை: ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் பிரிவு பைனலில் இந்திய வீராங்கனைகள் தீபிகா பாலிகல் - ஜோஷ்னா சின்னப்பா மோதுகின்றனர். சென்னையில் நடந்து வரும் இந்த தொடரின் அரை இறுதியில் முதல் நிலை வீராங்கனை ஆனி ஆவுடன் (ஹாங்காங்) நேற்று மொதிய தீபிகா 11-9, 7-11, 11-7, 11-9 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதியில் ஜோஷ்னா 11-6, 11-4, 11-8 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் டோங் ஸ்விங்கை வீழ்த்தினார். பைனலில் தீபிகா - ஜோஷ்னா மோதுவதால், இந்தியாவுக்கு தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் உறுதியாகி உள்ளது. ஆண்கள் பிரிவு அரை இறுதியில் ஹாங்காங் வீரர் லியோ ஆவுடன் மோதிய இந்திய வீரர் சவுரவ் கோசல் 11-6, 11-7, 11-3 என எளிதாக வென்று பைனலுக்கு முன்னேறினார்.

மூலக்கதை