என்.எஸ்.இ., பங்கு வெளியீடுதள்ளிப்போக காரணம் என்ன?
புதுடில்லி:என்.எஸ்.இ., என சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய பங்குச் சந்தை, புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, 2016 டிசம்பரில், ‘செபி’யிடம் அனுமதி கோரி விண்ணப்பித்தது.நான்கு மாதங்கள் ஆகியும், பங்கு வெளியீட்டிற்கு செபி அனுமதி வழங்காமல் உள்ளது.
இதற்கு, என்.எஸ்.இ., பாரபட்சமாக, ஒரு சில பங்குத் தரகர்களின், ‘சர்வர்’களை, தன் வளாகத்தில் நிறுவ, அனுமதித்ததே காரணம். இது குறித்து, ‘செபி’ தலைவர் அஜய் தியாகி கூறுகையில், ‘‘சர்வர் விவகாரத்திற்கு தீர்வு கண்ட பினேன், பங்கு வெளியீட்டிற்கு அனுமதி அளிக்கப்படும். அதற்கு சில மாதங்கள் ஆகும்,’’ என்றார்.
என்.எஸ்.இ., வளாகத்தில் உள்ள பங்குத் தரகர்களின் சர்வர்கள், தொலை துாரத்தில் உள்ள, பங்குத் தரகர்களின் சர்வர்களை விட, விரைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. அதனால், இத்தகைய பாரபட்ச போக்கிற்கு, என்.எஸ்.இ., தீர்வு கண்ட பின்னே, அதன் பங்கு வெளியீட்டிற்கு செபி, அனுமதி வழங்கும் என, தெரிகிறது.