அட்ஷயதிரியை நாளில் சவரனுக்கு ரூ.104 உயர்ந்த தங்கம்

தினமலர்  தினமலர்
அட்ஷயதிரியை நாளில் சவரனுக்கு ரூ.104 உயர்ந்த தங்கம்

சென்னை : அட்ஷயதிரிதியை தினத்தை முன்னிட்டு, நகைக்கடைகளில் நேற்று முதல் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளதால், தங்கம் விலையும் உயர்வுடனேயே காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.13 ம், சவரனுக்கு ரூ.104 ம் அதிகரித்துள்ளது.

இன்றைய (ஏப்ரல் 29) காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2791 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.29,680 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.22,328 க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.42.80 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.800 குறைந்து ரூ.42,800 ஆகவும் உள்ளது.

மூலக்கதை