ஐ.பி.எல்.சீசன் 10 : 26 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது ஐதராபாத்

தினகரன்  தினகரன்

மொகாலி: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொகாலியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது. ஐதராபாத் அணியில் 3 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர். ஐதராபாத் அணியில் அதிகபட்டசமாக தவான் 77, வில்லியம்சன் 54, வார்னர் 51 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷான் மார்ஷ் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மூலக்கதை