விருதுநகர் அருகே கொல்லப்படும் மயில்கள்

தினகரன்  தினகரன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நரிக்குடி, வீரசோழன் போன்ற பகுதிகளில் ஏராளமான மயில்கள், மான், முயல், காட்டுப்பன்றி போன்றவை வாழ்கின்றன. தற்போது நிலவும் கடும் வறட்சியால் இரை தேடி பறவைகள், விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. விவசாய நிலங்களை பாழ்படுத்துவதாக கூறி சிலர், மயில் மற்றும் விலங்குகளை விஷம் வைத்து கொல்கின்றனர். வீரசோழன் கிராமத்தில் நேற்று 10க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இவைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என போலீசார் விசாரிக்கின்றனர். தேசியப்பறவையான மயில்கள் கொல்லப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மூலக்கதை