திருவள்ளூர் வீரராகவர் கோயில் சித்திரை பிரமோற்சவ விழா மே 1ம் தேதி கொடியேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூர் வீரராகவர் கோயில் சித்திரை பிரமோற்சவ விழா மே 1ம் தேதி கொடியேற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழா மே 1ம் தேதி காலை 5. 30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.   காலை 7 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் தேவி, பூதேவி சமேதராக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். தினமும் கோயிலில் காலை 9 மணிக்கு பத்தி உலாவும், 11 மணிக்கு திருமஞ்சனமும் நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் வீரராகவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 வரும் 3ம் தேதி காலை கருட சேவையும், 7ம் தேதி காலை தேர் திருவிழாவும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை வீரராகவ  பெருமாள் கோயில் தேவஸ்தானம் சார்பில் கோயில் கவுரவ ஏஜன்ட் சம்பத் செய்து வருகிறார்.

.

மூலக்கதை