புதுகை முன்னாள் எம்எல்ஏ ஓபிஎஸ் அணியில் இணைய முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதுகை முன்னாள் எம்எல்ஏ ஓபிஎஸ் அணியில் இணைய முடிவு

புதுக்கோட்டை: கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் புதுக்கோட்டை நகர் மன்ற தலைவராக கார்த்திக்தொண்டைமான் தேர்வு செய்யப்பட்டார். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துக்குமார் கார் விபத்தில் இறந்தார்.

இதனையடுத்து நடந்த இடைத்தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கார்த்திக்தொண்டைமானை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற செய்தார்.

 இதன் பிறகு கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டையில் மீண்டும் போட்டியிட ஜெயலலிதா அவருக்கு வாய்ப்பு வழங்கினார். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் பெரியண்ணன் அரசுவிடம் தோல்வியடைந்தார்.
ஜெயலலிதா இறந்த பிறகு கார்த்திக் தொண்டைமான், சசிகலா அணியில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை கார்த்திக்தொண்டைமான், ஓபிஎஸ் அணியில் இணையபோவதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை