கோவையில் ரூ.50 லட்சம் செல்லாத நோட்டு பறிமுதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோவையில் ரூ.50 லட்சம் செல்லாத நோட்டு பறிமுதல்

கோவை: கோவையில் செல்லாத ரூ. 500, ரூ. ஆயிரம் நோட்டுகள் வைத்திருந்த பெங்களூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விசாரணை நடக்கிறது. கோவை ஆர். எஸ். புரம் என். எஸ். ஆர். ரோட்டில் உள்ள ஒரு வங்கி முன்பு நேற்று 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர்.

அவர்களது உடமைகளை சாய்பாபாகாலனி போலீசார் சோதனையிட்டபோது, அதில் ரூ. 44 லட்சம் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், ரூ. 6 லட்சம் மதிப்பில் பழைய 500 ரூபாய் நோட்டுகளும் இருந்தன.

 அதை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்களில் ஒருவர் இளங்கோவன் (62), மற்றொருவர் ராம் திவாகர் (48), ரியல் எஸ்டேட் அதிபர்கள் என்பது தெரிந்தது.

அவர்களிடம் விசாரித்ததில், வீடு விற்ற பணத்தை கொண்டு வந்ததாகவும், குருவாயூர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவதாகவும் முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளனர்.

இதனால் அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

.

மூலக்கதை