திருநாவுக்கரசர் அதிமுகவா? காங்கிரஸா? தமிழிசை ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
திருநாவுக்கரசர் அதிமுகவா? காங்கிரஸா? தமிழிசை ...

முன்னாள் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் அதிமுகவுக்கு சாதகமாகவே பல நேரங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். இதுவரை அதிமுகவில் இருந்திருந்தால் நான் தான் முதல்வர் என்று அவரது ஆதரவாளர்களிடம் கூறியது குறித்து கூட செய்தி வந்தது.



 

இந்த நிலையில் அதிமுக இரண்டாக பிரிந்தவுடன் தினகரன் அணிக்கு கடந்த சில நாட்களாக ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் கூறியபோது, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறாரா அல்லது அதிமுக அம்மா அணியில் இருக்கிறாரா என கிண்டலுடன் கேள்வி எழுப்பியுள்ளார்

தினகரன் என்ன தேசதுரோகமா செய்துவிட்டார்?' என திருநாவுக்கரசர் தினகரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில் இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ''தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காங்கிரஸில் இருக்கிறாரா அல்லது அதிமுக அம்மா அணியில் இருக்கிறாரா என்று சந்தேகம் எழும்பும் வகையில் தினகரனுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். 'தினகரன் என்ன தேசதுரோகமா செய்துவிட்டார்?' என திருநாவுக்கரசர் தினகரனுக்கு பரிந்து பேசுவது வேடிக்கையாக உள்ளது.

'ஒட்டுக்கு காசு கொடுப்பது, இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுப்பதும் ஜனநாயக படுகொலை இல்லையா? மேலும் அவர் நான் அடுத்து என்ன நடக்கப் போகிறது என ஜோசியம் சொல்கிறேன் என்று திருநாவுக்கரசர் கூறுகிறார்.

ஜோசியம் சொல்வதால் தமிழக மக்களுக்கு நல்லது நடக்குமென்றால் ஜோசியம் சொல்வதில் தவறில்லை.

நாங்கள் தொடர்ந்து ஜோசியம் சொல்லிக்கொண்டுதான் இருப்போம்' என்று கூறினார்

.

மூலக்கதை