போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கி தூக்கிய காவற்துறை வீரன் -அதிர்வலைகளை ஏற்படுத்திய காணொளி!!

PARIS TAMIL  PARIS TAMIL
போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கி தூக்கிய காவற்துறை வீரன் அதிர்வலைகளை ஏற்படுத்திய காணொளி!!

லுப்பெனும் வேண்டாம், மக்ரோனும் வேண்டாம் «Ni Le Pen ni Macron» என்ற போராட்டம் ஒரு குழுவினரால் நாடெங்கும் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று பரிசிலும் மற்றைய பல பெருநகரங்களிலும் கவலரங்கள் ஏற்பட்டுள்ளன.
 
 
 
 
இதில் ரென்னில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது அங்கு கடமையில் இருந்த காவற்துறை வீரன், கலவரத்தின் உச்சியில், அங்கு திரண்டு வந்த மக்களை கோக்கித் தனது துப்பாக்கியை எடுத்துக் குறிவைத்துள்ளார்.
 

 
 இந்தக் காவற்துறை வீரனின் தலைக் கவசத்தில் இரும்புக் கம்பியாலும், சீமெந்துக் கட்டைகளாலும் அடித்ததன் பின்னரே தற்காப்பிற்காகக் காவற்துறை வீரன் துப்பாக்கியை எடுத்துள்ளார்.
 
 
இதனைத் தங்களிற்குச் சாதகமாக்கியிருக்கும் சில அமைப்புகள் இதனை விமர்சித்து வருகின்றது.
 

மூலக்கதை