அகதிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் - ஜேர்மன் இராணுவ வீரன் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
அகதிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்  ஜேர்மன் இராணுவ வீரன் கைது!!

ஜேர்மனி இராணுவத்தின் (Bundeswehr) இராணுவீரன் ஒருவர் ஸ்ரார்ஸ்பேர்க் (Strasbourg - Bas-Rhin) நகரத்தின் புறகர்ப்பகுதியான  Ilkrich இல் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.  இங்கு பிரான்ஸ் - ஜேர்மனி இராணுவத்தின் பெரும் கூட்டுப் படைத்தளம் ஒன்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
28 வயதுடைய இவர், அங்குள்ள அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்களின் மீது பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களைச் செய்திருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இவர் சிரிய அகதிபோல், அவர்களின் முகாமிற்குள் புகுந்துஈ தாக்குதலை நடாத்தும் முயறசியில் ஈடுபட்டிருந்தார் என்றும், இன்னொரு 24 வயதுடைய ஜேர்மன் மாணவனுடள் இணைந்தே இந்தத் தாக்குதலை நடாத்த முயற்சித்திருந்துள்ளார் எனவும், ஜேர்மனியின் உளவுத்துறையும் தகவல் தெரிவித்துள்ளது. இவரிடம் அனுமதியில்லாத பல ஆயுதங்கள் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இனத்துவேசத்தின் அடிப்படையிலேயே, இவர் அகதிகள் மீது தாக்குதலை நடாத்த முயற்சித்துள்ளார் என்றும், பிரெஞ்சு உளவுத்துறை, மற்றும் காவற்துறையினரின், அதிரடி நடவடிக்கை இந்தத் தாக்குதலை முறியடித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மூலக்கதை