மக்டொனால்சிற்குள் குண்டு வெடிப்பு - பதற்றத்தில் வெளியெற்றப்பட்ட மக்கள்!! (காணொளி)

PARIS TAMIL  PARIS TAMIL
மக்டொனால்சிற்குள் குண்டு வெடிப்பு  பதற்றத்தில் வெளியெற்றப்பட்ட மக்கள்!! (காணொளி)

கிரனோபிளில் (Grenoble) உள்ள மக்டொனால்ஸ் ஒன்றில், விசமிகள் வைத்த தீயைத் தொடர்ந்து குண்டுவெடிப்பும் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று 11h50 அளவில் Aigle பகுதியில் நடந்துள்ளது.
 
 
 
முதலில் இங்கிருந்த கழிப்பறைக்குள் இருந்தே கடுமையான புகை வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பற்றிய தீயுடன் பெரும் வெடிச்சத்தமும் கேட்டதாகவும் இந்த மக்டொனால்சின் முகாமையாளர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் நடந்த நேரம், உள்ளே முப்பது பேர் இருந்ததாகவும், உடனடியாக அவர்கள் காயங்களின்றிப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்தச் சம்பவத்திற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இப்போதைக்கு எதனையும் உறுதிப்படுத்த முடியாது என்றும், கிரனோபின் மாவட்டக் காவற்துறை ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.
 

மூலக்கதை