ஜனாதிபதித் தேர்தலிற்குள் உச்சத்திற்குச் செல்லும் வேலையற்றோர் தொகை!!
பெப்ரவரி மாத இறுதிக்கும், மார்ச் மாத இறுதிக்கும் இடையில், வேலையற்றோர் தொகை மீண்டும் உயர்ந்துள்ளது. எந்த விதமான வேலையும் செய்யாமல் இருக்கும் A பிரிவினரின் தொகையான 1.3% ஆன 43.700 பேர இனால் அதிகரித்து A பிரிவின் மொத்தத் தொகையானது, 3 508 100 பேராக அதிகரித்துள்ளது. இந்தத் தகவலை தொழிற்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது.
குறுகிய கால ஒப்பந்தத்தில் வேலை செய்தவர்களும், ஒப்பந்தங்கள் முடிந்தவர்களும், B மற்றும் C பிரிவுகளில் இருந்து, A பிரிவிற்கு வந்தமையாலேயே இந்த அதிகரிப்பு என, Pôle Emploi காரணம் காட்டி உள்ளது.
இருப்பினும் இரண்டாம் சுற்றுத் தேர்தலிற்கு முன்னதாக இந்தத் தொகை வெளியிடப்பட்டிருப்பதால், நிச்சயம் இது இரண்டு வேட்பாளர்களின் தேர்தற்பிரச்சாரங்களில் கேள்விக்குள்ளாக்கப்படும்.