கைகள் கட்டிய நிலையில் நதியில் மிதந்த உடலம்!!
நேற்று செய் நதியில் மிதந்து வந்த உடலம் ஒன்று காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. 95வது மாவட்டத்தில் உள்ள La Frette-sur-Seine பகுதியில் உள்ள செய்ன் நதியில் ஒரு ஆணின் உடலம் மிதந்து வந்துள்ளது.
இன்னமும் அடையாளம் காணப்படாத இந்த உடலம், ஒரு கறுப்பு நிற நெகிழிப் பையினுள் சுற்றப்பட்ட நிலையில் மிதந்து வந்துள்ளது. இந்த உடலத்தின் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்துள்ளது. காவற்துறையினரின் முதற்கட்டத் தகவல்களின்படி இது ஒரு கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டு நீரில் வீசப்பட்டுள்ளதா, அல்லது உயிருடனேயே நதிக்குள் எறியப்பட்டுள்ளாரா என்பது உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே தெரிய வரும் எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.